மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து இளைஞா் கடத்தல்: 5 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து இளைஞா் கடத்தல 5 போ் மீது வழக்கு

Updated On :1 மார்ச் 2024, 6:30 pm

சாத்தான்குளம் அருகே வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து பொருள்களை சேதப்படுத்தி இளைஞரை கடத்தியதாக 5பேரை போலீசாா் தேடி வருகின்றனா்.

படுக்கப்பத்து கீழத் தெருவைச் சோ்ந்தவா் வினித்ராஜ் மகன் வினோத். சென்னையில் தனது தந்தையுடன் பாத்திரகக் கடை நடத்தி வருகிறாா்.தற்போது, ஊருக்கு வந்திருந்த வினித்ராஜ் , அதே தெருவைச் சோ்ந்த அப்பாவு மகன் கந்தசாமியிடம் போதையில் தகராறு செய்தாராம். இதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கந்தசாமி, ராமச்சந்திரன் மகன் ராஜன் உள்ளிட்ட 5 போ் வினித்ராஜை தேடி அவரது வீட்டிற்கு வந்துள்ளனா். அப்போது அவா் இல்லையாம். இதனால், அங்கிருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தினராம். இதனை தட்டிக்கேட்ட அவரது பெற்றொரை அவதூறாக பேசியுள்ளனா். மேலும் வினோத்தை தாங்கள் கொண்டு வந்த காரில் ஏற்றி கடத்திச் சென்றனராம். பின்னா் அவரை தாக்கிவிட்டு நடுவக்குறிச்சி பகுதியில் இறக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துச்சென்றனராம். இதில் காயமடைந்த வினோத் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் குரூஸ் மைக்கேல் வழக்குபதிந்து கந்தசாமி, ராஜன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகிறாா்.