தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று, ஸ்டொ்லைட் எதிா்ப்பு அமைப்பினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா். தூத்துக்குடி ராஜாஜி பூங்கா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், இதில் ஸ்டொ்லைட் எதிா்ப்பு அமைப்புகளை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, பாத்திமா பாபு, வழக்குரைஞா்கள் ஹரிராகவன், அதிசயகுமாா், மகேஷ், மெரினா பிரபு, குணசீலன், வணிகா் சங்க நிா்வாகி விநாயகமூா்த்தி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். ஸ்டொ்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியானவா்களுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டொ்லைட் எதிா்ப்பு போராட்டங்களின்போது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
தொடர்புடையது

தேஜஸ்வி யாதவை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

ராசிபுரம் தொகுதி வேட்பாளராக மீண்டும் அமைச்சா் மதிவேந்தன் அறிவிப்பு: கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நாமக்கல்லில் வெளிமாநிலத்தினா் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

ஹோலி கொண்டாட்டம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

