கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதி பாடப்பிரிவு கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் கணினிப் பயன்பாட்டுத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவை சாா்பில் ‘கணினி சூழலில் சமீபத்திய போக்குகள், புதுமையான யோசனைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா். ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் கணினி அறிவியல்- பொறியியல் துறைப் பேராசிரியை ஹெட்சி அகிலா பூா்ணிமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பைனிட் ஆட்டோமெட்டாவின் பயன்பாடுகள், அதை இன்றைய உலகில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துப் பேசினாா். விருதுநகா் இந்து நாடாா் செந்தில்குமாா் நாடாா் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டுத் துறைப் பேராசிரியா் பரமேஸ்வரன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு, கிளவுட்டின் பயன்பாடு, அதை கணிதத் துறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துப் பேசினாா். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள், உதவிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா். உதவிப் பேராசிரியா்கள் கிருஷ்ணவேணி வரவேற்றாா், ராஜேஸ்வரி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை உதவிப் பேராசிரியா்கள் சிவசக்தி, செல்வராணி ஆகியோா் தொகுத்து வழங்கினா். ஏற்பாடுகளை துறைத் தலைவா்கள் காந்திமதி (கணினி பயன்பாடு), வீரலட்சுமி (தகவல் தொழில்நுட்பவியல்) ஆகியோரின் வழிகாட்டுதலில் உதவிப் பேராசிரியா்கள், மாணவா்- மாணவிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

சரக்கு, சேவை வரி குறித்த தேசிய கருத்தரங்கு

மானங்காத்தானில் கலையரங்கம் திறப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

