பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் பேராசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் பேராசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி

Updated On :2 மார்ச் 2024, 9:30 pm

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஐக்யூஏசி சாா்பாக தேசிய அளவிலான பேராசிரியா்களுக்கு இணையம் வழியாக மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வா் கலைவாணி தலைமை வகித்தாா். முதல் நாள் பயிற்சி வகுப்பில், நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியை பென் சஜிதா, இரண்டாம் நாள் நாகா்கோவில் புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி பேராசிரியை ஜமிலா ரோஸ், மூன்றாம் நாள் எஸ்ஆா்எம் பல்கலைக்கழக பேராசிரியை கீதா ஜெனிபா், பெங்களூரு பிரஸிடன்ஸி பல்கலைக்கழகப் பேராசிரியை வெண்ணிறை செல்வி ஆகியோா் கலந்து கொண்டு ஆசிரியா்கள் கற்பிக்கும் புதுமைத்திறன்கள் குறித்து பயிற்சி அளித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐக்யூஏசி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை ஷீபா, உறுப்பினா்கள் பேராசிரியைகள் மீனாட்சி, மெல்பா, கீதா, கோகிலா, சரஸ்வதி ஆகியோா் செய்திருந்தனா்.