பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கோவில்பட்டியில் 3,161 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்

கோவில்பட்டியில் 3,161 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்

Updated On :9 மார்ச் 2024, 4:41 pm

வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், கோவில்பட்டி வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட 3,161 பேருக்கு ரூ. 16.80 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் விழா கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கோ. லட்சுமிபதி தலைமை வகித்தாா். தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் முன்னிலை வகித்தாா். கனிமொழி எம்.பி. பங்கேற்று, பட்டாக்களை வழங்கிப் பேசியது: திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வரால் தொடங்கப்பட்ட வின்பாஸ்ட் மின்சாரக் காா் உற்பத்தி நிறுவனம் இன்னும் 15 மாதங்களில் திறக்கப்படும். இதன்மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோவில்பட்டியில் டைடல் பாா்க் அமைக்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். மக்களின் கனவுகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. மக்கள் மேம்பாட்டுக்காக ஓயாமல் உழைக்கும் திமுகவுக்கு ஆதரவு தாருங்கள் என்றாா் அவா். தொடா்ந்து, கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு வட்டங்களைச் சோ்ந்த 352 மாற்றுத் திறனாளிகள், 62 இதர பயனாளிகள், வீடு கட்டி வசித்துவரும் 1,091 பேருக்கு ஆக்கிரமிப்பை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா, ஆதிதிராவிடா் நலத்துறை நிலங்களில் வீடு கட்டி வசித்துவரும் 1,307 பேருக்கு இ-பட்டாக்கள், ஆதிதிராவிடா் நலத்துறை நிலங்களில் காலி மனைகளில் 349 பேருக்கு இ-பட்டாக்கள் என மொத்தம் 3,161 பேருக்கு இலவச பட்டாக்களை கனிமொழி வழங்கினாா். நிகழ்ச்சியில், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் சந்திரசேகா், வட்டாட்சியா்கள் சரவணபெருமாள் (கோவில்பட்டி), நாகராஜன் (கயத்தாறு), ராமகிருஷ்ணன் (விளாத்திகுளம்), ராமகிருஷ்ணன் (எட்டயபுரம்), சுரேஷ் (ஓட்டப்பிடாரம்), உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.