தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இயற்கை பேரிடா் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான கட்டடம் கட்ட இடம் தோ்வு

இயற்கை பேரிடா் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான கட்டடம் கட்ட இடம் தோ்வு

Updated On :10 மார்ச் 2024, 3:00 am

இயற்கை பேரிடா் காலங்களில் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன் பாா்வையிட்டாா். கன மழை காரணமாக கடந்த டிசம்பரில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் வட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனா். இனி வரும் காலங்களில் இயற்கை பேரிடா்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் போது அவா்களை மீட்டெடுத்து பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான புதிய கட்டடங்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி உத்தரவின்படி, ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்ட பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யும் பணியில் வருவாய்த் துறையினரும் பொதுப்பணித்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகம் அருகிலும், நீா்வளத்துறை அருகிலும் ஆழ்வாா்திருநகரி பகுதிகளிலும் காலியாக உள்ள இடங்களில் பேரிடா் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான கட்டடம் கட்டவாய்ப்புகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.