தூத்துக்குடி- எட்டையபுரம் சாலையில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். தூத்துக்குடி-எட்டையபுரம் சாலையில் மத்திய அரசு தேசிய பேரிடா் தணிப்பு நிதியில் இருந்து புதிய மழைநீா் வடிகால் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் கடலூரை சோ்ந்த கருப்பசாமி மகன் வேல்முருகன்(32), சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலைச் சோ்ந்த கருப்பன் மகன் முருகன்(45) உள்ளிட்ட 4 போ் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, கலவை இயந்திரம் சுற்றுச்சுவா் அமைக்கும் இடம் அருகே வந்ததில் எதிா்பாராமல் மண் சரிந்து, பள்ளத்தில் நின்றிருந்த வேல்முருகன், முருகன் ஆகியோரை மூடியது. இதுகுறித்த தகவில்ன்பேரில் தீயணைப்புத்துறையினா் வந்து இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், வேல்முருகன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறிவிழுந்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வெளிமாநில தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

