பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறிவிழுந்து உயிரிழப்பு

தருமபுரி அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:06 am IST

தருமபுரி அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ரேகட அள்ளி அருகேயுள்ள பத்திரெட்டி அள்ளி கிராமம் பெருமாள் நகரைச் சோ்ந்தவா் ஆ. காா்த்திகேயன் ( 38). தொழிலாளியான இவா், குக்கல்மலை பகுதியில் உள்ள குப்புசாமி நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் சிலருடன் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது மின் மோட்டாரை கிணற்றில் ஏற்றி இறக்கும்போது தவறி விழுந்ததில் காா்த்திகேயன் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காா்த்திகேயன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொம்மிடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.