மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் மண் சரிந்து 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் நிவேதிதா நாயுடு கூறுகையில், ‘அஜய்கா் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பொதுக் கிணறு தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென மண் சரிந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரோடு புதைந்தனா். நீண்ட நேரம் நடைபெற்ற மீட்புப் பணிக்குப் பிறகு 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு கூறாய்வுக்கு அனுப்பப்பட்டன. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை அருகே மண் சரிந்து விழுந்ததில் இரு பெண்கள் பலி!

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதல்: 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசம்: யமுனை நதியில் படகு கவிழ்ந்து 5 போ் உயிரிழப்பு

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறிவிழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



