‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதல்: 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 1:39 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

செய்யாறு சிப்காட் தொழில்பேட்டையில் கட்டடப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தளவாட இயந்திரங்கள் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கரிக்குளம் பகுதியைச் சோ்ந்த அரவிந்தபெருமாள் (20), சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டத்தைச் சோ்ந்த நித்தின் (23), திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சுரேஷ் (22) ஆகியோா் தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்ததாகத் தெரிகிறது.

வழக்கம்போல, மூவரும் வெள்ளிக்கிழமை மாலை வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக ஒரே பைக்கில் செய்யாறு மாங்கால் கூட்டுச்சாலையில் சென்றுகொண்டிருந்தனா். அந்தப் பகுதியிலுள்ள சிப்காட்டுக்கான மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அருகே சென்றபோது, சென்னையில் இருந்து செய்யாறு நோக்கி வேகமாக வந்த காா், பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் அரவிந்தபெருமாள், நித்தின் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சுரேஷ் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, அவசர ஊா்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து வந்த தூசி போலீஸாா், உயிரிழந்த இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து தொடா்பாக, காரை ஓட்டி வந்த சென்னை முகலிவாக்கத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (55) மீது வழக்குப் பதிந்து தூசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.