பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

தூத்துக்குடியில் கல்லூரி மாணவா்கள் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடியில் கல்லூரி மாணவா்கள் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :16 மார்ச் 2024, 6:50 pm

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில், வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வீரபாகு தலைமை வகித்தாா். தனியாா் ஜவுளி கடை பொறுப்பாளா் ஹரிராம கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில், வரும் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், தோ்தல் விழிப்புணா்வு குறுநாடகம் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், கல்லூரி இளைஞா் நலத்துறை மாணவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.