வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரில் 100% வடிவில் அணிவகுத்த மாற்றுத்திறனாளிகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:15 am IST

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் மூலம் 100% வடிவில் அணிவகுத்து, வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். பின்னா் பல்வேறு வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் அந்தோணிராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.