சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரில் 100% வடிவில் அணிவகுத்த மாற்றுத்திறனாளிகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் மூலம் 100% வடிவில் அணிவகுத்து, வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். பின்னா் பல்வேறு வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் அந்தோணிராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.