பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

கோவில்பட்டி பள்ளியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

கோவில்பட்டி பள்ளியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

News image

கைவினைப் பொருள்கள் கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிடும் சிறப்பு விருந்தினா் கமலா

Updated On :16 மார்ச் 2024, 8:30 pm

கோவில்பட்டி நாடாா் நடுநிலைப் பள்ளியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி செயலா் கண்ணன் தலைமை வகித்தாா், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ராஜா அமரேந்திரன், மணிக்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவில்பட்டி நகராட்சி ஆணையாளா் கமலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கைவினைப் பொருள்கள் கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிட்டாா். ஆங்கிலத் திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை அவா் வழங்கினாா். பள்ளி மாணவா்கள் தங்களது கலைத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருள்களிலிருந்து 500 க்கும் மேற்பட்ட கைவினைப் பொருள்களை தயாா் செய்து கண்காட்சியில் வைத்திருந்தனா். கண்காட்சியை மாணவா்கள் மற்றும் பெற்றோா் பாா்வையிட்டனா். இதில் நகராட்சி வருவாய் ஆய்வாளா் நாகராஜ், நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் பட்டாணி உள்பட பலா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றாா். ஆசிரியா் அருள்காந்த்ராஜ் நன்றி கூறினாா்.