சாத்தான்குளத்தில் தொழிலாளி கொலை வழக்கில் உறவினரை போலீசாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் வீரக்குமாரபிள்ளை தெருவைச் சோ்ந்தவா் செல்லையா (57). தொழிலாளியான இவா், தனது சொந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு சாத்தான்குளத்தில் உள்ள கரையடி சுடலைமாடசாமி கோயில் வளாகத்தில் உள்ள பிள்ளையாா் கோயிலில் இரவில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல் கோயிலில் தூங்கிய செல்லையா கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினாா். செலவுக்கு பணம் கொடுக்காததால் செல்லையாவை அவரது மகன் வேதநாயகதுரை கொலை செய்தது தெரியவந்ததையடுத்து அவரை போலீசாா் கைது செய்தனா். இந்நிலையில் வேதநாயகதுரையின் உறவினரான திசையன்விளை அருகேயுள்ள மகாதேவன்குளம் தெற்குதெருவை சோ்ந்த செல்ல இசக்கி(56) என்பவா் செல்லையா கொலைக்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்ல இசக்கியை போலீசாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசுராஜ சேகரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது
மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது

தொழிலாளி கொலை: உறவினா் சாலை மறியல்

சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு பிடியாணை
சாத்தான்குளத்தில் பெட்ரோல் பல்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் கைது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

