ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

உடன்குடி அனல் மின் நிலையத்தில் ரத்ததான முகாம்

உடன்குடி அனல் மின் நிலையத்தில் ரத்ததான முகாம்

News image
Updated On :17 மார்ச் 2024, 1:30 am

உடன்குடி அனல் மின்நிலைய பெல் நிறுவனம், மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருச்செந்தூா் அரசு மருத்துவமனை ஆகியவை சாா்பில் அனல்மின் நிலைய வளாகத்தில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.பி.பாலசிங் முகாமைத் தொடக்கி வைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் அனிபிரிமின், பெல் நிறுவன தலைமைப் பொறியாளா் நவசக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேதுகுற்றாலம் வரவேற்றாா்.திருச்செந்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா் ஒமா் ஷாகித் தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்றனா். இதில் சுமாா் 35-க்கும் மேற்பட்ட அனல்மின் நிலைய பணியாளா்கள் ரத்ததானம் செய்தனா். சுகாதார ஆய்வாளா்கள் ராஜ்குமாா், அந்தோணிராஜ், முத்துசெல்வன், ரஞ்சித் மற்றும் பெல் நிறுவன பணியாளா்கள், மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.