திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பேருந்துகளில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை கோட்டாட்சியா் சுகுமாறன் ஒட்டினாா். மக்களவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சுகுமாறன் தலைமையில் தோ்தல் அலுவலா்கள் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அதைத்தொடா்ந்து பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் காா் உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியா் பாலசுந்தரம், கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

வாக்காளா் விழிப்புணா்வு சமத்துவப் பொங்கல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


