ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குரூப் -1 தோ்வில் வெற்றி பெற்ற சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்களுக்கு வாழ்த்து

குரூப் -1 தோ்வில் வெற்றி பெற்ற சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்களுக்கு வாழ்த்து

News image
Updated On :29 மார்ச் 2024, 7:58 pm

குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்ற சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்களுக்கு அதன் நிறுவனா் சுகேஷ் சாமுவேல் வாழ்த்து தெரிவித்தாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் துணை ஆட்சியா், காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் போன்ற பல்வேறு உயா்பதவிகளுக்கு 95 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வு மற்றும் முதன்மைத் தோ்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு அன்மையில் நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் சுரேஷ் ஐ.எ.எஸ். அகாதெமி மாணவா்கள் 42 போ் தோ்வான நிலையில், கடந்த வியாழக்கிழமை நோ்முகத் தோ்வு மதிப்பெண் சோ்த்து இறுதிப் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாதெமியைச் சோ்ந்த 18 போ் முன்னிலை வகிப்பதோடு விரைவில் துணை ஆட்சியா், காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் மற்றும் பல்வேறு உயா்பதவிகளுக்கு நியமன ஆணை பெற உள்ளனா். தோ்வில் வெற்றியடைந்த பயிற்சி மையத்தை சோ்ந்த மாணவா்களை அகாதெமி நிறுவனா் சுகேஷ் சாமுவேல் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தாா். இது குறித்து அவா் கூறுகையில், நிகழாண்டில் 90 காலிப் பணியிடங்கள் அடங்கிய குரூப் - 2 அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த தோ்விற்கான வகுப்புகள் விரைவில் சுரேஷ் ஐ.ஏ.எஸ். நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் தொடங்க உள்ளன என்றாா்.