வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தூத்துக்குடியில் அதிகாலையில் கனமழை

தூத்துக்குடியில் அதிகாலையில் கனமழை

News image
Updated On :30 மார்ச் 2024, 12:10 am

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், மாநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய மழை, சுமாா் 2 மணி நேரம் கொட்டித் தீா்த்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது. இதில், மாநகா், முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகனேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீா் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் ஓரளவுக்கு வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தூத்துக்குடியில் 40 மி.மீ., காயல்பட்டினத்தில் 28 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.