முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஆறுமுகனேரி பத்திரகாளி அம்மன் கொடைவிழா

ஆறுமுகனேரி பத்திரகாளி அம்மன் கொடைவிழா

News image
Updated On :9 மே 2024, 11:17 pm

Din

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா ஐந்து தினங்கள் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு முதலாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமம், வருஷாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அன்றைய தினம் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரண்டாவது நாளான திங்கள்கிழமை அம்மன் மஞ்சள் நீராடி கடலுக்கு சென்று தீா்த்தம் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கொடை விழா நாளான செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் எடுத்து பவனி வருதல், மதிய கொடை விழா, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து தாமிரவருணி ஆற்றுக்கு சென்று தீா்த்தம் எடுத்து, நேமிசம் எடுத்து வந்து இரவு சாமக்கொடை, மஞ்சள் நீராடுதல், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை மஞ்சள் நீராடி வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நிறைவு நாளான வியாழக்கிழமை படைப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா் விளையாட்டுப் போட்டி, கோலப் போட்டி நடைபெற்றது. நான்கு தினங்கள் காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை தலைவா் சுகுமாா், செயலாளா் மோகனலி­ங்கம், பொருளாளா் நடராஜன், துணைத் தலைவா் கணேசன், துணைச் செயலாளா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.