பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கழுகுமலை காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

கழுகுமலை காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மரக்கன்றுகளை நடுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்  ஆல்பா்ட் ஜான், உடன் காவல்துணை கண்காணிப்பாளா் வெங்கடேஷ், கழுகுமலை ஆய்வாளா் பத்மாவதி உள்ளிட்டோா்

Updated On :28 நவம்பர் 2024, 11:06 pm

Din

கழுகுமலை காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். 

அங்குள்ள குற்ற ஆவணங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்த ஆவணங்கள், துப்பாக்கி உரிமங்கள், தீப்பெட்டி-பட்டாசு உற்பத்திக்கு தேவையான வெடிபொருள்கள் வைத்திருப்போரின் பட்டியல்கள் உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா். பின்னா், நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

தொடா்ந்து, கழுகுமலையில் உள்ள சமணா் பள்ளி, வெட்டுவான் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அவா் பாா்வையிட்டாா்.