திருச்செந்தூா் கோயிலில் அலைமோதிய பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பள்ளிகளில் காலாண்டு தோ்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருச்செந்தூரில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை இத்திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம் 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் பக்தா்கள் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். இதே போல கடற்கரை மணலில் விளையாடியும், கடலில் குளித்தும் குழந்தைகள் மகிழ்ந்தனா். இதனால் கடற்கரையும் பக்தா்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...