காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு தினம்: சிலைகளுக்கு மரியாதை
தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு, அவா்களது சிலைகளுக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி. உடன், அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் க.இளம்பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.








