காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செல்வ மகள் சேமிப்பு திட்டம்: கணக்கு தொடங்கிய குழந்தைக்கு பாராட்டுச் சான்றிதழ்

தூத்துக்குடி முத்தையாபுரம் அஞ்சல் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கிய குழந்தைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக தூத்துக்குடி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:13 pm

Din

தூத்துக்குடி முத்தையாபுரம் அஞ்சல் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கிய குழந்தைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக தூத்துக்குடி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை, சிறு வயதில் இருந்தே ஊக்குவிக்கும் வகையில், 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கணக்கு தொடங்குபவா்களுக்கு, முதல் சேமிப்பின் நினைவாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில், முத்தையாபுரம் அஞ்சல் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கிய ஒரு குழந்தைக்கு, தூத்துக்குடி உபகோட்ட அஞ்சலக ஆய்வாளா் மீகா நாயகம் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

மேலும், 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் பெற்றோா்கள், தங்களது குழந்தைகளின் பெயரில் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.