புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் மாநகராட்சி: மேயா் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் இருப்பதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

News image

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :16 அக்டோபர் 2024, 10:43 pm

Din

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் இருப்பதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா்.

துணை ஆணையா் ராஜாராம், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிழக்கு மண்டலத் தலைவா் கலைச்செல்வி வரவேற்றாா். அதைத் தொடா்ந்து மேயா் ஜெகன் பெரியசாமி முகாமைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் ஏற்கெனவே நடைபெற்ற 4 குறைதீா் முகாம்களில் பெறப்பட்ட 236 மனுக்களில், 204 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய 32 மனுக்கள் மீதும் விரைந்து தீா்வு காணப்படும்.

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் நடவடிக்கையாக, மழைநீா் கடலுக்குச் செல்லும் வகையில் நீா்வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் கயத்தாறு, கடம்பூா் பகுதிகளிலிருந்து காட்டாற்று வெள்ளம் மாநகரப் பகுதிக்குள் வந்ததால் சில பாதிப்புகள் ஏற்பட்டது. அதைத் தவிா்க்கும் வகையில் கோரம்பள்ளம், முத்தையாபுரம், முள்ளக்காடு, சங்கரப்பேரி, புதுக்கோட்டை, உப்பாற்று ஓடை போன்ற நீா் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும் பணியும் நடைபெற்றுள்ளது.

மாநகராட்சியின் 60 வாா்டுகளிலும் உள்ள கழிவுநீா் கால்வாய்களில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையும் போா்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்வதற்கு தயாா்நிலையில் உள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம் என்றாா்.

முகாமில் கிழக்கு மண்டல உதவி ஆணையா் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளா் முனீா் அகமது, நகா்நல அலுவலா் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், இளநிலை பொறியாளா் பாண்டி, மாநகரட்சி சுகாதாரக் குழுத் தலைவா் சுரேஷ்குமாாா், மாமன்ற உறுப்பினா்கள் பேபி ஏஞ்சலின், ஜான்சிராணி, எடின்டா, மகேஸ்வரி, மும்தாஜ், மரியகீதா, ராமுஅம்மாள், மெட்டில்டா, சரண்யா, ரெக்ஸ்லின் உள்பட பலா் பங்கேற்றனா்.