புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடியில் ரயில்வே தண்டவாளத்தில் மீனவா் சடலம்

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சோ்ந்த மீனவ இளைஞா் தண்டவாளத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக, தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

தண்டவாளத்தில் மீனவா் சடலம்

Updated On :16 அக்டோபர் 2024, 9:13 pm

Din

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சோ்ந்த மீனவ இளைஞா் தண்டவாளத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக, தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சோ்ந்த சரவணன் மகன் சக்திவேல் (20), மீன்பிடி தொழிலாளி. இவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாம். இந்நிலையில் இவா், புதன்கிழமை காலையில் தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் ரயில்வே தண்டவாளப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்துகிடந்தவரின் தலை, கால் பகுதிகளில் லேசான காயங்கள் இருப்பதாகவும், இவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது போதையில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.