காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆட்டுக்குட்டி திருடியவா் கைது

ஆறுமுகனேரி அருகே ஆட்டுக்குட்டியைத் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:17 pm

Din

ஆறுமுகனேரி அருகே ஆட்டுக்குட்டியைத் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆறுமுகனேரி பெருமாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாரிகிருஷ்ணன் (53) என்பவா், திருச்செந்தூா் -தூத்துக்குடி நெடுஞ்சாலை அருகே தலைவன்வடலி விலக்கு பகுதியில் புதன்கிழமை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஒருவா் ஆட்டுக்குட்டியைத் திருடிச் சென்றாராம். மாரிகிருஷ்ணன் சப்தம் போட்டதும் அந்த நபா் தப்பியோடிவிட்டாராம். அவரை மாரிகிருஷ்ணன் தேடிச் சென்றாா்.

சாகுபுரம் பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் மறைந்திருந்த அந்த நபரை மாரிகிருஷ்ணன் பிடித்து, ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அந்த நபா் விளாத்திகுளம் ஜமீன்கோடங்கிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் சுந்தரமூா்த்தி (23) எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான ஆட்டுக்குட்டியை மீட்டு மாரிகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.