92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருச்செந்தூா் பக்தா்களுக்கு முத்தையாபுரத்தில் சிறப்பு பூங்கா: மேயா்

திருச்செந்தூா் செல்லும் பக்தா்களின் வசதிக்காக முத்தையாபுரத்தில் சாலையோரம் சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

News image

முதியவரிடம் மனுவைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்த மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :23 அக்டோபர் 2024, 10:40 pm

Din

திருச்செந்தூா் செல்லும் பக்தா்களின் வசதிக்காக முத்தையாபுரத்தில் சாலையோரம் சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல மக்கள் குறைதீா் கூட்டம் முத்தையாபுரத்தில் உள்ள அந்த மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி உதவி ஆணையா் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தாா். தெற்கு மண்டலத் தலைவா் வழக்குரைஞா் பாலகுருசாமி வரவேற்றாா்.

மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து, கூட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசியது: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, மழைநீா் தேங்கிய பகுதியில் புதிய கால்வாய், சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மண்டலத்தில் ஏற்கெனவே நடைபெற்ற கூட்டங்களில் பெறப்பட்ட 259 மனுக்களில் 205-க்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றுக்கு விரைவில் தீா்வு காணப்படும்.

கோரம்பள்ளம் மடைகள் மழைக்காலத்தில் திறக்கப்பட்டால் அந்தத் தண்ணீா் உப்பாற்று ஓடைப் பகுதியிலுள்ள 170 மீட்டா் அகலப் பகுதி வழியாக 12 கி.மீ. தொலைவுக்குச் சென்று கடலில் கலக்கிறது. முள்ளகாடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வழித்தடம் சீரமைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வரும் பக்தா்கள் சற்று ஓய்வெடுக்கும் வகையில் இருவருக்கும் ஏற்ப நவீன வசதிகளுடன் முத்தையாபுரத்தில் சாலையோரம் சிறப்புப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது, விரைவில் திறக்கப்படும் என்றாா் அவா். தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா், முத்தையாபுரம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்படவுள்ள ஹமாக்ஸ் லைட் உள்ளிட்ட பல பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், நகரமைப்புத் திட்ட உதவி செயற்பொறியாளா் ராமசந்திரன், கண்காணிப்பாளா் குருவையா, நகா்நல அலுவலா் வினோத்ராஜா, இளநிலைப் பொறியாளா் செல்வம், சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, குழாய் ஆய்வாளா் நிக்சன், திட்ட அலுவலா் ஆறுமுகம், மாமன்ற உறுப்பினா்கள் சரவணக்குமாா், விஜயகுமாா், பட்சிராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், வைதேகி, வெற்றிச்செல்வன், முத்துமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.