92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்களுக்கு பயிற்சி

கோவில்பட்டி நகராட்சியில், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பயிற்சி முகாமில் பேசுகிறாா் கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா

Updated On :24 அக்டோபர் 2024, 11:27 pm

Din

கோவில்பட்டி நகராட்சியில், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களுக்குள்பட்ட நகராட்சி தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள், தூத்துக்குடி, சிவகாசி மாநகராட்சி திட்டப் பணியாளா்களுக்கு நகரங்களின் தூய்மைக் கணக்கீடு, குப்பையில்லா நகரம் உருவாக்குதல் குறித்த சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா தலைமை வகித்தாா். சென்னை நகராட்சி நிா்வாக இயக்குநரக அலுவலக தூய்மை இந்தியா திட்ட அலுவலா்கள் ஜான் பிரிட்டோ, கௌதம் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

இதில், தூத்துக்குடி, சிவகாசி மாநராட்சிகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூா், விருதுநகா் மாவட்டம் விருதுநகா், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், அருப்புக்கோட்டை, சாத்தூா் நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளா்கள், மேற்பாா்வையாளா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், கோவில்பட்டி நகராட்சி நகா்நல அலுவலா் வசுமதி, துப்புரவு ஆய்வாளா்கள் ஆரியங்காவு, சுதாகரன், கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முகாமில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.