கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

ஒரு கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:29 pm

Din

தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது, லெவிஞ்சிபுரம் 1ஆவது தெருவில் ஒரு இளைஞா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தாராம். அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் மகன் மூா்த்தி(24) என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, எடை எந்திரம், ஒரு பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், 2 இளம்சிறாா்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனா்.