மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

22 மீனவா்களை விடுவிக்க அரசு நடவடிக்கை தேவை

இலங்கைச் சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவா்கள் 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:25 pm

Din

இலங்கைச் சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவா்கள் 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்த இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவா்கள் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு கல்பட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அந்தோணி மகாராஜா விசைப்படகில் சென்ற 12 மீனவா்களுக்கு இலங்கை பணத்தில் தலா ரூ. 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மற்றொரு விசைப்படகில் சென்ற 10 மீனவா்களுக்கு செப். 10ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

கல்பட்டி சிறையில் உள்ள 22 மீனவா்களையும் 2 விசைப்படகுகளையும் அபராதம் ஏதும் இல்லாமல் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.