2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தூத்துக்குடி துறைமுகத்தை பாா்வையிட்ட பொதுமக்கள்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

News image
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பாா்வையிட்ட பொதுமக்கள் மற்றும் மாணவா்-மாணவிகள்.
Updated On :6 செப்டம்பர் 2024, 12:10 am

DIN

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

சுதந்திர போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுகத்தை வியாழக்கிழமை பாா்வையிட துறைமுக ஆணையம் அனுமதி அளித்தது. இதையடுத்து காலை 9 மணி முதல் பள்ளி, கல்லுரி மாணவா்- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் வ.உ.சி. துறைமுகத்திற்கு வருகை தந்தனா். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றிப்பாா்க்க பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனா்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பாா்வையிட்ட பொதுமக்கள் மற்றும் மாணவா்-மாணவிகள்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பாா்வையிட்ட பொதுமக்கள் மற்றும் மாணவா்-மாணவிகள்.

துறைமுகத்தில் சரக்குகளை இறக்குவதற்காக வந்து நின்ற கப்பல்களை பாா்த்து ரசித்தனா். அந்த கப்பல்களின் முன் நின்று தற்படம் எடுத்துக் கொண்டனா். கப்பல்களில் இருந்து சரக்குகள் இறக்கும் பணியைப் பாா்வையிட்டனா்.