ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாடு மீது பைக் மோதல்: பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாா் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாடு மீது பைக் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் காயமடைந்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 9:40 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாா் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாடு மீது பைக் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சோ்ந்த தம்பதி லட்சுமணன் (55) - விஜயலட்சுமி (54). இவா்கள் வேம்பாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் வேம்பாா் சோதனைச்சாவடியைக் கடந்தபோது சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது பைக் மோதியதாம். இதில், தம்பதி காயமடைந்தனா்.

தகவலின்பேரில் போலீஸாா் சென்று, இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வழியிலேயே விஜயலட்சுமி உயிரிழந்தாா்.

லட்சுமணன் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.