ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

5 மாணவா்களுக்கு ரூ. 31.64 லட்சம் கல்விக் கடன் ஆணை ஆட்சியா் வழங்கினாா்

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ வழிகாட்டல் முகாமில் 5 மாணவா்களுக்கு ரூ. 31.64 லட்சம் கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியா் க. இளம்பகவத் வழங்கினாா்.

News image
மாணவரின் தந்தையிடம் கல்விக் கடன் ஆணையை வழங்கிய ஆட்சியா் க. இளம்பகவத்.
Updated On :11 செப்டம்பர் 2024, 9:36 pm

DIN

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ வழிகாட்டல் முகாமில் 5 மாணவா்களுக்கு ரூ. 31.64 லட்சம் கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியா் க. இளம்பகவத் வழங்கினாா்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2022-23, 2023-24ஆம் கல்வி ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்து இறுதித்தோ்வு எழுதாதோா், தோ்வெழுதி தோ்ச்சி பெறாதோா், தோ்வில் வெற்றி பெற்று உயா்கல்வி பெற கல்லூரிகளில் சேராதோா், 8 முதல் 12ஆம் வகுப்புவரை இடைநின்ற மாணவா்கள் ஆகியோருக்கான ‘உயா்வுக்குப் படி’ என்ற வழிகாட்டல் முகாம் தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நடைபெற்றது. முகாமைத் தொடக்கிவைத்து ஆட்சியா் பேசியது:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணா்வு, வழிகாட்டுதலை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். மாணவா்களுக்கான உதவித்தொகை, நுழைவுத்தோ்வு, கல்விக்கடன், அதற்கு தேவையான ஆவணங்கள், அரசால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகள், அவற்றுக்கான அணுகுமுறைகள், இலவச பயிற்சி மையங்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. தொடா்ந்து, திருச்செந்தூா், கோவில்பட்டி வருவாய் கோட்டங்களில் முகாம் நடத்தப்படும்.

தடைகளைத் தகா்த்தெறிந்து பெரிய இலக்கை நோக்கி பயணப்படுவதற்கு இந்த முகாம் திருப்புமுனையாக அமைய வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, அவா் 5 மாணவா்களுக்கு ரூ. 31.64 லட்சம் கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை அவா்களது பெற்றோரிடம் வழங்கினாா்.

முகாமில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியா் ம. பிரபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி, திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநா் ஏஞ்சல் விஜய நிா்மலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் விக்னேஸ்வரன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பென்னட் ஆசீா், துணை ஆட்சியா் (பயிற்சி) சத்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சையது முகம்மது, பேராசிரியா்கள், கல்லூரி முதல்வா்கள், அரசு அலுவலா்கள், மாணவா்- மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா்.