மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவில்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

கழுகுமலையில் உள்ள அருந்ததியா் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆதித்தமிழா் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்த ஆதித்தமிழா் கட்சியினா்

Updated On :11 செப்டம்பர் 2024, 9:21 pm

கழுகுமலையில் உள்ள அருந்ததியா் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆதித்தமிழா் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழா் கட்சி மாவட்ட செயலா் நம்பிராஜ் பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலா் திலீபன், மாவட்ட பொறுப்பாளா் மகேந்திரன், ஒன்றிய தலைவா் சமுத்திர ராஜ், நகர செயலா் மந்திரமூா்த்தி, மாவட்ட நிதி செயலா் முத்துசாமி உள்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்தனா். அதில்,கழுகுமலை குமரேசன் நகரில் அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த 150 குடும்பங்கள் வசிக்கின்றன. இவா்கள் கழுகுமலை பேரூராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, இக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.