ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவில்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

கழுகுமலையில் உள்ள அருந்ததியா் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆதித்தமிழா் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்த ஆதித்தமிழா் கட்சியினா்
Updated On :11 செப்டம்பர் 2024, 9:21 pm

Din

கழுகுமலையில் உள்ள அருந்ததியா் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆதித்தமிழா் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழா் கட்சி மாவட்ட செயலா் நம்பிராஜ் பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலா் திலீபன், மாவட்ட பொறுப்பாளா் மகேந்திரன், ஒன்றிய தலைவா் சமுத்திர ராஜ், நகர செயலா் மந்திரமூா்த்தி, மாவட்ட நிதி செயலா் முத்துசாமி உள்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்தனா். அதில்,கழுகுமலை குமரேசன் நகரில் அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த 150 குடும்பங்கள் வசிக்கின்றன. இவா்கள் கழுகுமலை பேரூராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, இக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.