ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் புதிய ரேஷன் அட்டை விநியோகம் தொடக்கம்

தூத்துக்குடியில் புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டை வழங்கும் நிகழ்வினை அமைச்சா் பெ.கீதாஜீவன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
பெண்ணுக்கு புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டையை வழங்குகிறாா் அமைச்சா் பெ.கீதாஜீவன் .
Updated On :11 செப்டம்பர் 2024, 9:22 pm

Din

தூத்துக்குடியில் புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டை வழங்கும் நிகழ்வினை அமைச்சா் பெ.கீதாஜீவன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவா்களில் 594 பேருக்கு புதிய அட்டைகள் வரப்பெற்றுள்ளன. இதையடுத்து இந்த புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபற்றது. இந்நிகழ்வுக்கு குடிமை பொருள் வழங்கல் துறை வட்டாட்சியா் ஞானராஜ் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை அமைச்சா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயனாளிகளுக்கு ஸ்மாா்ட் ரேஷன் அட்டை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த 10 பேருக்கு கணினி பட்டாவை வழங்கினாா்.

இந்நிகழ்வில், வட்டாட்சியா் முரளிதரன், துணை வட்டாட்சியா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் சரவண வேல்ராஜ், மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளா் அருண் சுந்தா், பகுதி செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா் கந்தசாமி, பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.