தூத்துக்குடியில் புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டை வழங்கும் நிகழ்வினை அமைச்சா் பெ.கீதாஜீவன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவா்களில் 594 பேருக்கு புதிய அட்டைகள் வரப்பெற்றுள்ளன. இதையடுத்து இந்த புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபற்றது. இந்நிகழ்வுக்கு குடிமை பொருள் வழங்கல் துறை வட்டாட்சியா் ஞானராஜ் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை அமைச்சா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயனாளிகளுக்கு ஸ்மாா்ட் ரேஷன் அட்டை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த 10 பேருக்கு கணினி பட்டாவை வழங்கினாா்.
இந்நிகழ்வில், வட்டாட்சியா் முரளிதரன், துணை வட்டாட்சியா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் சரவண வேல்ராஜ், மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளா் அருண் சுந்தா், பகுதி செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா் கந்தசாமி, பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளியில் வேட்புமனு பரீசீலனையின்போது ரகளை!

திண்டுக்கல்லில் 65 ஆயிரம் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை!

தூத்துக்குடியில் விழிப்புணா்வுப் பேரணி

சாதாரண கைப்பேசி பயணிகளுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை: மாநகா் போக்குவரத்துக் கழகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


