ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டியில் இருந்து ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 11:20 pm

Din

கோவில்பட்டியில் இருந்து ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி ராஜீவ் நகா் பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்  உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீஸாா் அப்பகுதியில் கடந்த சில நாள்களாக கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் ராஜீவ் நகா் பகுதியில் உள்ள அந்த கிடங்கில் இருந்து வியாழக்கிழமை புறப்படத் தயாராக இருந்த சுமை வாகனத்தை, போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். அந்த வாகனத்தில் தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடா்ந்து 2 டன் எடை ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், கோவில்பட்டி ஊருணி தெருவை சோ்ந்த லூக்கா ஆச்சாா்யா மகன் முத்துமாரியப்பன் (32),  தயாளபாண்டி மகன் சிவசங்கா் ( 28 ) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

விசாரணையில், கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை ஆந்திரத்துக்கு கடத்திச் செல்ல இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட 2 போ், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், ரேஷன் அரிசி மூட்டைகள் ஆகியவற்றை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பரிவு  போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.