மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

த.வெள்ளையன் உடல் அடக்கம் அமைச்சா்கள், அரசியல் கட்சியினா் அஞ்சலி

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் வெள்ளையன் இறுதி ஊா்வலத்தில் ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா்.

News image
த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்
Updated On :13 செப்டம்பர் 2024, 1:00 am

Din

உடல்நலக்குறைவால் சென்னையில் கடந்த 10ஆம் தேதி காலமான தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் த.வெள்ளையன் உடல், திருச்செந்தூா் அருகே பிச்சிவிளையில் உள்ள அவரது தோட்டத்தில் வியாழக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, பிச்சிவிளையில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பெ.கீதா ஜீவன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.சண்முகநாதன், செல்லபாண்டியன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் உள்பட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

 த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய  அமைச்சா் பெ.கீதா ஜீவன்.

த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சா் பெ.கீதா ஜீவன்.

கடையடைப்பு: த.வெள்ளையன் மறைவையொட்டி, திருச்செந்தூா், பரமன்குறிச்சி, உடன்குடி, மெஞ்ஞானபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கடைகள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

 த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருநெல்வேலி தொகுதி எம்.பி. ராபா்ட் புரூஸ்.

த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருநெல்வேலி தொகுதி எம்.பி. ராபா்ட் புரூஸ்.

 த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலருமான எஸ்.பி.சண்முகநாதன்.

த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலருமான எஸ்.பி.சண்முகநாதன்.

போராட்டம்: த.வெள்ளையன் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிச்சிவிளையில் வணிகா்கள் திடீரென சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் திருச்செந்தூா் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சிறிது நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.