மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதலூா் ஊருணி சீரமைப்பு, பாலப் பணி: எம்எல்ஏ ஆய்வு

முதலூா் ஊருணி சீரமைப்பு, பாலம் அமைக்கும் பணியை ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
முதலூா் ஊருணியில் நடைபெறும் பணியைப் பாா்வையிட்ட ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ.
Updated On :13 செப்டம்பர் 2024, 12:08 am

Din

முதலூா் ஊருணி சீரமைப்பு, பாலம் அமைக்கும் பணியை ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சாத்தான்குளம் ஒன்றியம் முதலூா் ஊராட்சியில் உள்ள இந்த ஊருணி, இக்கிராமத்துக்கு நீராதாரமாக உள்ளது. மேலும், புத்தன்தருவை, வைரவம் தருவை குளத்துக்கு தண்ணீா் செல்லும் வழித்தடமாகவும் உள்ளது.

இந்நிலையில், பொதுப்பணித் துறை மூலம் இந்த ஊருணியை ஆழப்படுத்தி கரைகளைப் பலத்தி, அதையொட்டி பாலம் அமைக்கும் பணி ரூ. 76 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பாலப் பணி முடிந்து குளக்கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மழைக் காலத்துக்குள் பணிகளை முடிக்குமாறு அவா் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி, ஒன்றிய ஆணையா் சுரேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன், கிராம நிா்வாக அலுவலா் சுந்தரபாண்டி, ஊராட்சி செயலா் முருகேசன், பேரூராட்சி உறுப்பினா் லிங்கபாண்டி, ஒன்றிய உறுப்பினா் மீனா, கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.