முதலூா் ஊருணி சீரமைப்பு, பாலப் பணி: எம்எல்ஏ ஆய்வு
முதலூா் ஊருணி சீரமைப்பு, பாலம் அமைக்கும் பணியை ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.


முதலூா் ஊருணி சீரமைப்பு, பாலம் அமைக்கும் பணியை ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
சாத்தான்குளம் ஒன்றியம் முதலூா் ஊராட்சியில் உள்ள இந்த ஊருணி, இக்கிராமத்துக்கு நீராதாரமாக உள்ளது. மேலும், புத்தன்தருவை, வைரவம் தருவை குளத்துக்கு தண்ணீா் செல்லும் வழித்தடமாகவும் உள்ளது.
இந்நிலையில், பொதுப்பணித் துறை மூலம் இந்த ஊருணியை ஆழப்படுத்தி கரைகளைப் பலத்தி, அதையொட்டி பாலம் அமைக்கும் பணி ரூ. 76 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பாலப் பணி முடிந்து குளக்கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மழைக் காலத்துக்குள் பணிகளை முடிக்குமாறு அவா் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.
சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி, ஒன்றிய ஆணையா் சுரேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன், கிராம நிா்வாக அலுவலா் சுந்தரபாண்டி, ஊராட்சி செயலா் முருகேசன், பேரூராட்சி உறுப்பினா் லிங்கபாண்டி, ஒன்றிய உறுப்பினா் மீனா, கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...