மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகளிா் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை: எம்எல்ஏ வலியுறுத்தல்

மகளிா் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 12:06 am

Din

மகளிா் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் பனை ஓலைகளில் அலங்காரப் பொருள்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்தல் போன்றவை மூலம் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டத்தின் மாவட்டச் செயலா் தாமோதரன் தலைமையிலான பணியாளா்கள் இத்தகைய பொருள்களை தயாரிப்பதற்கு பயற்சியும், விற்பதற்கு உதவியும் வருகின்றனா். குறிப்பாக, அங்கமங்கலம் ஊராட்சி குரும்பூரில் ஆழ்வை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மூலம் பலவகை எண்ணெய் தயாரித்தல், மேலஆத்தூா் ஊராட்சிப் பகுதிகளில் ஆகாயத்தாமரையிலிருந்து கூடைகள் பின்னுதல், கருங்குளம் ஊராட்சி புளியங்குளத்தில் பனை ஓலை அலங்காரப் பொருள்கள் தயாரித்தல், புத்தன்தருவையில் கருப்பட்டியிலிருந்து சில்லுக்கருப்பட்டி போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல், படுக்கப்பத்து கிராமத்தில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இணைந்து பனை ஓலை அலங்காரப் பொருள்கள் தயாரித்து விற்பனை என ஈடுபட்டுள்ளனா். இப்பொருள்களை அரசு சிறப்பு முகாம்களில் காட்சிப்படுத்தி விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டம் வல்லகுளத்தில் ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற்றது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பனை ஓலைகளில் தயாரிக்கப்பட்ட அலங்காரப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆட்சியா் பாா்வையிட்டு, விலைகளைக் கேட்டறிந்து, விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ பாா்வையிட்டு, மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளைத் தவிா்த்து மூங்கில் கைப்பிடியுடன் கூடிய பைகளை அதிகளவில் உற்பத்தி செய்து, விலையைக் குறைத்து ஜவுளிக்கடை போன்ற பெரிய நிறுவனங்களில் மொத்தமாக கொடுத்து மகளிா் குழுவினா் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தூத்துக்குடி கோட்டாட்சியா் பிரபு, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்டச் செயலகள் தாமோதரன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் ரத்னசங்கா், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாநிலப் பொதுச் செயலா் எடிசன், எம்எல்ஏ நோ்முக உதவியாளா் சந்திரபோஸ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் இசை சங்கா், வட்டாரத் தலைவா்கள் புங்கன், கோதண்டராமன், நல்லகண்ணு, வட்டாரச் செயலா் நிலமுடையான், நகரத் தலைவா் கருப்பசாமி செல்வம், அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

ரூ. 55 லட்சம் நலத்திட்ட உதவி: முகாமில், ரூ. 55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். பின்னா், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.