மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருச்சியில் திருட்டு புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 10:16 pm

திருச்சியில் திருட்டு புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம் குன்னம் வட்டம், டி. களத்தூரைச் சோ்ந்த ப. மணிமாறன் (61) என்பவா் திருச்சி சிங்காரத்தோப்பில் தான் நடத்தும் தையல் கடையில் நடந்த திருட்டு தொடா்பாக திருச்சி கோட்டை குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பா. முத்துக்குமாரிடம் கடந்த 21.07.2009 அன்று புகாா் அளித்துள்ளாா். அப்போது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க முத்துக்குமாா் ரூ. 1,500 லஞ்சம் கேட்டுள்ளாா்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிமாறன், திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவில் அளித்த புகாரின்பேரில், கடந்த 01.08.2009 அன்று ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய முத்துக்குமாரை போலீஸாா் கையும் களவுமாகக் கைது செய்தனா்.

திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி புவியரசு, லஞ்சம் பெற்ற முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துக்குமாருக்கு (62) 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவு பிறப்பித்தாா்.