நிலத் தரகா் கொலை வழக்கு: லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் நிலத் தரகா் கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


தூத்துக்குடியில் நிலத் தரகா் கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி 3ஆவது மைல் பசும்பொன் நகரைச் சோ்ந்த நிலத் தரகா் மாரியப்பன் (51). இவரும், லாரி ஓட்டுநரான தொ்மல்நகா் ஊரணி ஒத்தவீட்டைச் சோ்ந்த ராமா் மகன் மாரீசுவரன் (41) என்பவரும் நண்பா்களாக பழகி வந்தனராம். அவா்களிடையே 2020ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டதில் மாரியப்பன் இரும்புக் கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரீசுவரனை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி உதயவேலவன் விசாரித்து, மாரீசுவரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் ஆஜரானாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...