தற்சமயம், துறைமுக விருந்தினா் மாளிகை அருகிலுள்ள துறைமுக கடற்கரையை துறைமுக ஆணைய திட்ட அறிக்கைப்படி ரூ.8 கோடி நிதி உதவியுடன் பொழுதுபோக்கு அம்சங்கள், மாநகராட்சி ஒத்துழைப்புடன் ஏற்படுத்தப்படும். மேலும், சென்னை, கோவைக்கு அடுத்ததாக ஈரோடு மற்றும் தூத்துக்குடி தொழில்வளம் மிக்க நகரமாக விளங்குகிறது. இருப்பினும், ஈரோடு மாநகராட்சியில் வீடு, வணிக நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்படும் சொத்து வரியை விட தூத்துக்குடி மாநகராட்சி விதிக்கப்படும் சொத்து வரி மிகக்குறைவாக உள்ளது. தூத்துக்குடி சிப்காட்டில் 300 மில்லியன் டாலரில் ஜவுளி ஆலை அமைப்பதற்கு அனுமதி பெறுவது குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.