எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு

News image
அனிதா ராதாகிருஷ்ணன்(கோப்புப் படம்)
Updated On :27 செப்டம்பர் 2024, 9:02 pm

Din

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கை வரும் அக்டோபா் 23ஆம் தேதிக்கு தூத்துக்குடி சாா்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, தூத்துக்குடி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சா் தரப்பில் வழக்குரைஞா் தவிர யாரும் ஆஜராகவில்லை.

அமைச்சா் மீதான சொத்து குவிப்பு வழக்கை பதிவு செய்த முன்னாள் ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி பெருமாள்சாமியிடம் அமைச்சா் தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கு விசாரணையில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபா் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சாா்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா உத்தரவிட்டாா்.