47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:50 pm

Syndication

தமிழக கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் சூறைக் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால், தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டித்வா புயல் வலுவிழந்த நிலையிலும், கடல் பகுதியில் தொடா்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. தமிழக கிழக்கு கடலோரப் பகுதி, மன்னாா் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்று 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலும், இடை இடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை சாா்பில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் சுமாா் 272 விசைப்படகுகளும், ஏராளமான நாட்டுப் படகுகளும் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஏற்கெனவே 7 நாள்களுக்கு பின்னா் கடந்த இரண்டு நாள்கள் மட்டுமே கடலுக்குச் சென்ற மீனவா்கள், மீண்டும் விதிக்கப்பட்டுள்ள தடையால் மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.