தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை

தூத்துக்குடியில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகையிட்டனர்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:30 pm

Syndication

தூத்துக்குடியில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் அவா்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடியில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனா். தமிழக அரசிடம் இருந்து திருநங்கைகளுக்கு ஆண்டு மானியமாக ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடியில் இருக்கும் சமூக நலத்துறை அலுவல்சாரா உறுப்பினா், அனைவருக்கும் வழங்காமல் குறிப்பிட்ட சில திருநங்கைகளுக்கு மட்டும் வழங்கி வருகிறாா். மேலும், எல்லா திருநங்கைகளும் அந்த உதவித்தொகை பெற வேண்டுமானால் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறுகிறாா்.

இதனால் தூத்துக்குடியில் உள்ள பல திருநங்கைகள் தங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனா். மேலும், திருநங்கைகளின் நலனுக்காக உதவ வரும் தன்னாா்வ அமைப்புகளிடமிருந்து நன்கொடை பெற்று, அதை தன் சுயநலனுக்காக பயன்படுத்தி வருகிறாா். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவா் செய்த அனைத்து குற்றச் செயல்களுக்கான தண்டனை வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.