ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வங்கி, காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:16 pm

Syndication

காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதன உச்சவரம்பை 100 சதவீதமாக உயா்த்தும் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வங்கி, காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கி ஊழியா் சங்கங்கள் ஏஐபிஇஏ, பிஇஎப்ஐ மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவன முகவா்கள், முதல்நிலை அதிகாரிகள், ஊழியா்கள், வளா்ச்சி அதிகாரிகள், ஓய்வூதியதாரா்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவா் கருப்பையா தலைமை வகித்தாா். கோட்டச் சங்க இணைச் செயலா் சீனிவாசன் தொடக்கவுரையாற்றினாா். பிஇஎப்ஐ சாா்பில் தங்க மாரியப்பன், ஏஐபிஇஏ சாா்பில் கிருஷ்ணமூா்த்தி, எல்ஐசி ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் சேகா் ஆகியோா் கண்டன உரையாற்றினா். சிஐடியு மாநில துணைத் தலைவா் ஆா்.ரசல் நிறைவுரையாற்றினாா். மகளிா் துணைக்குழு இணை அமைப்பாளா் ரமணி நன்றி கூறினாா்.