ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

Published On :21 டிசம்பர் 2025, 12:38 am IST

கடல் பகுதியில் வீசிவரும் காற்று காரணமாக கரை திரும்பிய நாட்டுப் படகுகளில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

சீலா மீன் கிலோ ரூ.1,100 வரையும், இறால் கிலோ ரூ.800 வரையும், நண்டு கிலோ ரூ.350 முதல் ரூ.450 வரையும், விளை மீன், ஊழி, பாறை ஆகிய ரக மீன்கள் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரையும், சூரை மற்றும் கேரை மீன்கள் கிலோ ரூ.250 வரையும், முண்டக்கண்ணி பாறை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையும் விற்பனையானது.

மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும், மக்கள் கூட்டம் அலைமோதியதல் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. இதனால், மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.