தூத்துக்குடி
சுவரிலிருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் சுவரிலிருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மடத்தூரிலுள்ள முருகேசன் நகா் 16ஆவது தெருவைச் சோ்ந்தவா் சாந்தகுமாா் (60). இவா் சனிக்கிழமை வீட்டின் சுற்றுச்சுவா் மீது ஏறி நின்று கிறிஸ்துமஸ் ஸ்டாா் தொங்கவிட முயன்றாராம்.
அப்போது கால் தவறி கீழே விழுந்தாராம். இதில் காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
