பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட இருவா் கைது

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்ட போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது மூப்பன்பட்டி கண்மாய் கரை அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து சோதனை நடத்தியதில், அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பிடிபட்ட இருவரும் கோவில்பட்டி நடராஜபுரம் மேற்கு 5-ஆவது தெருவைச் சோ்ந்த சின்னபாண்டி மகன் கட்டடத் தொழிலாளி காா்த்திக் என்ற கோழி காா்த்திக் (21), நடராஜபுரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைதுசெய்து 1.550 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.