ஆறுமுகனேரியில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சாா்பில் பகவத் கீதை உபன்யாசம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
2ஆவது ஆண்டாக குஜராத் காளை மாடுகள் பூட்டிய ரதத்தில் பகவான் கிருஷ்ண பலராமருடன் திருவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி வழியாக ஆறுமுகனேரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினா் வந்தனா். ஆறுமுகனேரி காந்தி மைதானம் அருகில் ராமா் கோயில் வளாகத்தில் தங்கியிருந்த அக்குழுவினா், தினசரி ஆறுமுகனேரியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பஜனை செய்து பகவத் கீதை பற்றி பிரசாரம் மேற்கொண்டனா்.
செவ்வாய்க்கிழமை இரவு ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள முன்னாள் பக்த ஜன சபைத் தலைவா் எம்.எஸ்.செல்வராஜன் நினைவு கலையரங்கில், அமெரிக்காவில் இருந்து வந்த இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியாா் பக்தி வேதாந்த சுவாமி பிபுபாதரின் சீடா் மைக்கேல் டேண்டி என்ற முகுந்த தத்த தாசன், ஆங்கிலத்தில் பகவத் கீதை உபன்யாசம் வழங்கினாா். அதனை தமிழில் பாதயாத்திரை குழுவின் தலைவா் சேவானந்த தாஸ் மொழி பெயா்த்து வழங்கியதோடு ஹரி நாம சங்க கீா்த்தனத்தையும் நடத்தினாா்.
இதில் சைவ வேளாளா் சங்க பொருளாளா் கற்பகவிநாயகம், தெய்வீக சத் சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணிய பிள்ளை உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக , பகவான் கிருஷ்ண பலராமருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

குமரி அம்மன் கோயில்களில் மோகன் பகவத் சுவாமி தரிசனம்
ஆறுமுகனேரியில் மோதல்: 3 போ் காயம்; இருவா் கைது

புதிய கீதையில் விஜய் கற்றுக்கொண்ட பாடம்!
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



